Monday, December 14, 2009

நீ வருவாய் என !!!

நான் வருவேன் என நீ காத்திருந்தாய்,
மருத்துவமனை வாசலில்...
நானும் வந்தேன், பத்து மாதத்தில்--உன்னை ஏமாற்றாமல்!
நான் வருவேன் என நீ காத்திருந்தாய்,
என் பள்ளி வளாகத்தில்...
நானும் வந்தேன், பள்ளிப்படிப்போடு--உன்னை ஏமாற்றாமல்!
நான் வருவேன் என நீ காத்திருந்தாய்,
என் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில்...
நானும் வந்தேன் கல்லூரி களிப்போடு--உன்னை ஏமாற்றாமல்!
நான் வருவேன் என நீ காத்திருந்தாய்,
என் அலுவலக வாசலில்...
நானும் வந்தேன் வேலைக் களைப்போடு--உன்னை ஏமாற்றாமல்!
இதுவரை எனக்காக மட்டுமே காத்திருந்த நீ,
வருவாய் என காத்திருக்கிறேன்,
உன் நினைவுகளோடு......
வருவாயா அப்பா--என்னை ஏமாற்றாமல்!
என் கனவுகளோடு.....

குறிப்பு: உரையாடல் கவிதை போட்டிக்காக

16 comments:

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  2. நன்றி யாத்ரா...

    ReplyDelete
  3. கவிதை நன்று..வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நல்ல முயற்சி !
    வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. நன்றி நிலாரசிகன்!!!
    இது போதும் மக்கா எனக்கு.....

    ReplyDelete
  6. நன்றி பூங்குன்றன்...
    நன்றி அவனி அரவிந்தன்...

    ReplyDelete
  7. அருமையான கவிதை
    நல்ல நடை
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அருமையான கவிதை
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  10. ur kavithai is really good.keep it up.

    ReplyDelete
  11. மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  12. i didnt write a poem for my dad yet.. nice yar...

    ReplyDelete